சுகாதார விதிமுறைகளை மீறிய 33 பேர் கைது

06 2
06 2

கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்காத 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுவரையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.