150 கிலோ மீற்றர் நீளம் கொண்ட உலகின் மிகப்பெரிய பனிப்பாறை, அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள தீவொன்றின் மீது மோதும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2017ல் அண்டார்டிகா கண்டத்திலிருந்து பிளவுபட்ட இப் பிரமாண்ட பனிப்பாறை, கடல் நீரோட்டத்தின் காரணமாக தெற்கு ஜோர்ஜியா தீவை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது.
தற்போது இத் தீவிலிருந்து சுமார் 50 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பனிப்பாறையானது , தீவின்மீது மோதும் பட்சத்தில் அங்கு வாழும் பென்குயின்கள், கடல் நாய்கள் உள்ளிட்ட அரிய உயிரினங்கள் அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.