தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

கொழும்பில் உள்ள வீட்டுத்தொகுதிகள் சில தனிமைப்படுத்தலில் இருந்து உடனடியாக அமுலாகும் வகையில் விடுவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த தகவலை வழங்கினார்.

இதன்படி கொழும்பு, முகத்துவாரத்தில் உள்ள மெத்சந்த செவன, மிஹிஜய செவன ,மட்டக்குளியில் உள்ள ரந்திய உயன, க்ராண்ட்பாஸில் உள்ள மோதர உயன மற்றும் – சமகிபுர, தெமடகொடயில் உள்ள மிஹிந்துசெத்புர ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.