சுகாதார சட்டங்களை மீறிய 30 க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளின் அனுமதிப் பத்திரங்களை அரசாங்கம் இரத்து செய்துள்ளது.
கடந்த மூன்று வார காலப்பகுதியில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்ற 30 பேருந்துகளின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
சுகாதார வழிமுறைகளை புறந்தள்ளி பேருந்து சேவையினை முன்னெடுப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என போக்குவரத்து திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.