வவுனியா செட்டிக்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 18 வயது மதிக்கதக்க இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் 250 கிராம் கேரளா கஞ்சா போதைப்பொருளினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று (12) கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இளைஞனிடம் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டி குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
அத்துடன், குறித்த சம்பம் தொடர்பான விசாரணைகளிகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில்
குறித்த இளைஞனை முன்னிலைபடுத்தவுள்ளதாகவும் செட்டிகுளம் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது