கடந்த 24 மணிநேரத்தில் 60 பேர் கைது!

kaithu

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரத்தில் 60 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒன்பது காவற்துறை பிரிவுகளிலும், 25 கிராம சேவகர் பிரிவுகளிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்தள்ளது.

எனவே, எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்களுடன் ஒத்துழைப்பு வழங்குமாறும் காவற்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்