ரக்வான, உக்வத்த பகுதியில் கடந்த 29 ஆம் திகதி திருமணம் செய்த நபர் ஒருவர் வௌிநாடு செல்வதற்காக பீ.சி.ஆர் பரிசோதனை செய்து கொண்ட சந்தர்ப்பத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள 13 குடும்பத்தை சேர்ந்த 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுள் 10 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுள் குறித்த நபரின் மனைவி மற்றும் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அப்பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.