பௌசியின் கட்சி உறுப்புரிமை நீக்கம்

pausi
pausi

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியை குறித்த பதவியிலிருந்து நீக்கிவிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அறிவித்தலை இன்று (Nov.22) பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாகவும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.