முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மீனவர்கள்!

31fff27b742fce6127b7d155d641f2e9
31fff27b742fce6127b7d155d641f2e9

முல்லைத்தீவில், இந்திய இழுவைப் படகினால், பாதிக்கப்பட்ட மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு, வடமாகாண மீனவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை மற்றும் இந்திய அரசிடம் வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தினரால், இன்று கோரிக்கைககள் அடங்கிய மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த மகஜர்களை, யாழிலுள்ள இந்திய துணைத்தூதுவர் அலுவலகத்திலும், யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபரிடமும் வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தினர் இன்று வழங்கி வைத்தனர்.