புதிய அமைச்சரவையுடன் இணைந்து செயற்பட தயார்

mahinda rajapaksa1 1
mahinda rajapaksa1 1

புதிய அமைச்சரவையின் அமைச்சர்களுடன் இணைந்து நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபச்ஷ தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் 15 அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டு பதவியேற்றுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு, இடைக்காலை அமைச்சரவையுடன் இணைந்து அனைத்து இலங்கையர்களுக்கும் சேவையாற்றுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.