தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி வகைகளின் தொகை அதிகரித்துள்ளதுள்ளமையினால் மரக்கறி வகைகளின் விலை குறைவடைந்துள்ளது.
தற்பொழுது தாழ்நில மரக்கறி வகைகள் பல மத்திய நிலையத்திற்கு கிடைத்து வருகின்றன. பெருந்தொகை மரக்கறி வகைகளை விற்பனை செய்யமுடியாமல் சில சந்தர்ப்பங்களில் திரும்ப வீட்டுக்கு எடுத்துச் செல்வதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளரி, புடலங்காய், கத்தரி, பாகற்காய், தக்காளி முதலான மரக்கறி வகைகள் இன்று அதிகாலை தொடக்கம் பெருமளவில் தம்புள்ளை மத்திய நிலையத்திற்கு கிடைக்கப் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.