மக்கள் சேவைக்கு நள்ளிரவு 12 மணி வரை செயற்பட தயார்

mahinda amaraweera
mahinda amaraweera

போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி வலுசக்தி அமைச்சராக நியமனம் பெற்ற மஹிந்த அமரவீர நாட்டுக்காக தனது காலத்தையும் நேரத்தையும் அர்ப்பணித்து நாட்டை முன்னேற்ற பங்களியாக வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் மேலிருந்து கீழ் மட்டம் வரையில் உள்ளவர்கள் ஊழல் மோசடிகளுடன் தொடர்புபடாது அவற்றை செய்வதில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக உணர்வுடனும் மிகுந்த அவதானத்துடனும் செயற்பட வேண்டியது அவசியம் என தெரிவித்த அவர் மக்கள் சேவைக்காக தனது தொலைபேசி நள்ளிரவு 12 மணி வரை இயங்கும் எனவும் நேர காலம் பாராது மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை முடிந்தவரை சரியாக நிறைவேற்ற உள்ளதாகவும் குறிப்பிட்டார்.