குற்றம் சாட்டுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

ranil
ranil

நடந்து முடிந்தஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என ஐ.தே.க மீதும், கட்சி தலைமை மீதும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்ற நிலையில் அவ்வாறானவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றிப் பெறச் செய்யும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லையென முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தான் முழுமையாக நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டார்.

நிதி நடவடிக்கைகளை நாம் பொறுப்பேற்க வில்லை. அந்த குற்றச்சாட்டையும் நான் நிராகரிக்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.