சட்டவிரோதமாக மாடு வெட்டிய இருவர் கைது

kaithu

வவுனியா பட்டகாடு குளக்கட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாட்டினை இறைச்சிக்காக வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலிற்கமைய அப்பகுதிக்கு சென்ற வவுனியா தலைமை காவல்நிலைய குற்றத்தடுப்பு காவல்துறையினர் மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிக்கொண்டிருந்த இருவரை கைதுசெய்துள்ளதுடன், இறைச்சியையும் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் நாளையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

குறித்த கைது நடவடிக்கை தலைமை காவல்நிலைய உபகாவல்துறை பொறுப்பதிகாரி அழகிய வண்ணவின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் பிரனீத்திசா நாயக்கவின் தலமையில் இடம்பெற்றது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக சட்டவிரோதமான முறையில் மாட்டினை அறுக்கும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.