ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

How is COVID 19 Changing eCommerce Retail Businesses guest post 1
How is COVID 19 Changing eCommerce Retail Businesses guest post 1

ஹோமாகம, பிடிபன பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர்களுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்ட 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேரை தனிமைப்படுத்த சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த தொற்றாளர்களில் ஒரு பெண் பிடிபன பாடசாலை சந்தி பிரதேசத்தில் அமைந்துள்ள பேக்கரி ஒன்றில் பணி புரிந்து வந்துள்ள நிலையில், குறித்த பேக்கரியில் உணவுப் பொருட்களை பெற்றுக் கொண்ட நபர்களை இனங்காணுவதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை குறித்த விற்பனை நிலையத்தில் உணவு பெற்றுக் கொண்ட நபர்கள் இருந்தால் உடனடியாக பிரதேசத்தின் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.