மருதனார்மடம் கொரோனா கொத்தணி: மேலும் மூவருக்கு தொற்று!

CvlzVVEVYAAqytV 720x380 1
CvlzVVEVYAAqytV 720x380 1

மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 3 பேருக்கு கொரோனாநோய்த் தொற்று உள்ளமை இன்று (சனிக்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நேரத் தொடர்புடைய 3 பேருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்மூலம் மருதனார்மடம்கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 88ஆக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் தெல்லிப்பளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட இளவாலை, மல்லாகம் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 433 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய 430 பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.