முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நேற்றைய தினம் வயல் விழா மற்றும் விவசாய உள்ளீடுகள் விற்பனை பகுதி திறப்பு விழா என்பன சிறப்பாக இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பூ.உகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் வடமாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்
இங்கே இடம்பெற்றுள்ள பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மற்றும் விற்பனை பகுதிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட வடமாகாண ஆளுநர் விவசாயிகளுக்கு விதை தானியங்களையும் வழங்கி வைத்தார் இதில் வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் விவசாயத் திணைக்கள பணிப்பாளர் விவசாய அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்