கிளிநொச்சியில் பூநகரி பகுதியில் விபத்து

kilinochchi
kilinochchi

கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று காலை இரண்டு பாரவூர்திகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்தவர்களில் மூவர் யாழ். வைத்தியசாலையிலும், ஒருவர் பூநகரி வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.