2020, மே மாதம் 2ஆம் திகதி பொதுத் தேர்தல்!

gota 1
gota 1

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை 2020 ஆம் ஆண்டு, மே மாதம் 2ஆம் திகதி நடாத்துவதற்கான ஆலோசணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் 2020 மார்ச் முதலாம் திகதியுடன் பாராளுமன்றைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கான கட்டளையை ஜனாதிபதி வெளியிட்டால் 2020 மே 2ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்ற கூட்டத்தொடரை நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் ஒத்திவைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.