வவுனிக்குளம் வான் பாய்வதால் மக்களிடம் காவல்துறையினர் கோரிக்கை!

IMG 6826
IMG 6826

முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் குளத்தின் நீர்மட்டம் 26 அடியை கடந்துள்ள நிலையில் குளத்தின் வான் பாய்ந்து வருகின்றது.

இந்நிலையில் குறித்த வான் பாயும் காட்சியை காண்பதற்காக பல மக்கள் குறித்த பகுதிக்கு சென்று வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

நேற்று முன்தினம் குறித்த வான் பகுதியை பார்வையிடுவதற்காக வருகைதந்த வாகனமொன்று குளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் குளித்தல் மீன்பிடித்தல் நடவடிக்கைகள் நீர்ப்பாசன திணைக்களத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதிக்குள் இவ்வாறு வான் பாய்கின்ற காட்சிகளை பார்வையிடுவதற்காக வருகை தந்து ஏற்படுகின்ற உயிரிழப்புகள் மற்றும் நோய் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு குறித்த பகுதிகளுக்கு மக்கள் வருகை தருகின்ற நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.