இலங்கையில் தேயிலை உற்பத்தி அதிகாிப்பு!

pic 1 1
pic 1 1

இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் நாட்டில் 23.4 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 10.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு முன்னைய காலப்பகுதியில் கொவிட் 19 பரவல் காரணமாக தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.