விசுவமடுவில் திறன் வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு!

opening 2 1
opening 2 1

விசுவமடு பிரதேசத்தில் குழந்தை முதல் இங்கிலாந்து நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் குழந்தை மேம்பாட்டு மையம் நடைமுறைப்படுத்தி வரும் விசுவமடு திறன் விருத்தி நிலையத்தில் ரத்னம் அறக்கட்டளை அனுசரணையில் திறன் வகுப்பறை கட்டம் ஒன்று இன்று (23)திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறன் வகுப்பறையினை நாடாவை வெட்டி திறந்துவைத்துள்ளதுடன் பெயர் பலகையினையும் திரைநீக்கம் செய்து வைத்துள்ளார்.

நிகழ்வில் சி.எஃப்.சி.டி. நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பி.யோகநாதன் பெரண்டீனா தொழில் வளநிலைய முகாமையாளர் சிவஞானம், பெரண்டீனா தொழில் வளநிலைய மாவட்ட இளைஞர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் திரு ஸ்டெவின் நிறுவன கல்வி நிர்வாக நிர்வாகிகள் மற்றும் திறன் விருத்தி மாணவர்கள் பணியாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளார்கள்

opening 5
opening 5
opening 4
opening 3
opening 2 1
opening 4
opening 1
opening 1 1
opening 1