இலங்கை சமூக பாதுகாப்பு சபை ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த மாணவிகளுக்கான புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது!
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து 2019 ம் ஆண்டு கல்விப் பொதுதராதரப் பரீட்சையில் சித்தியடைந்த இரு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று(23) இடம்பெற்றுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வில் மாவட்ட செயலக சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்ட பிரிவின் மாவட்ட திட்ட இணைப்பாளர் க.சஞ்சீவன் அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிகளான தசரதராஜகுமாரன் அபிநயா அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா புலமைப்பரிசில் திட்டமும் மற்றும் கந்தசாமி கேமவாணி அவர்களுக்கு எழுவதாயிரம் ரூபா பெறுமதியான புலமைப் பரிசில் திட்டமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த இரு மாணவிகளும் பல்கலைக்கழக அனுமதியினை பெறும் பட்சத்தில் இவ் புலமைப்பரிசில் திட்டம் இரட்டிப்பு மடங்காகும் என்பது குறிப்பிடத்தக்கது