முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மிக சிறப்பாக இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வு!

olivila 8 2
olivila 8 2

முல்லைத்தீவு மாவட்ட செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலக கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில் ஒளிவிழா நிகழ்வு இன்று(23) மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட மறைக்கோட்ட முதல்வரும், முல்லைத்தீவு பங்குத் தந்தையுமான அருளானந்தம் யாவிஸ் அடிகளார் அவர்களால் திருப்பலி பூசை வழிபாடுகள் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றதை தொடர்ந்து ஆசியுரை வழங்கப்பட்டது.

மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் கரோல் கீதம் இசைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமை உரையினை தொடர்ந்து பிரதம கணக்காளர் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றுள்ளது.மேலும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளின் ஆளுமையை வெளிப்படுத்துகின்ற வகையில் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து அவர்களுக்கு பரிசில் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

olivila 7 2
olivila 8 2
olivila 1 1
olivila 5
olivila 5