பாதுகாப்பற்றிருந்த மின் இணைப்பில் சிக்கி சிவில் பாதுகாப்புபடை வீரர் உயிரிழப்பு!

IMG 20201224 WA0002
IMG 20201224 WA0002

வவுனியாவின் மகாகச்சக்கொடி – அலுத்வத்த பகுதியில் இன்று (24) காலை பாதுகாப்பற்றிருந்த மின் இணைப்பில் சிக்கி சிவில் பாதுகாப்புபடை வீரர் உயிரிழந்துள்ளதாக மாமடுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கியே சிவில் பாதுகாப்புபடை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர் வவுனியா மகாகச்சகொடியவில் வசிக்கும் அச்சிந்த திஸாநாயக்க (34) என்பவராவார்.

இறந்த சிவில் பாதுகாப்புப் படை வீரர் அலுத்வத்த காட்டு விலங்குகளைத் துரத்தச் சென்றிருந்தபோது விபத்து நடந்திருக்கலாமென காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாதுகாப்பற்ற மின் இணைப்புகளை அமைத்த நபர் யாரென இதுவரை கண்டுபிடிக்கபடவில்லை எனவும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இறந்த சிவில் பாதுகாப்பு படை வீரரின் உடல் திடீர்மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

மாமடுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG 20201224 WA0001
IMG 20201224 WA0000