லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்பாள் ஆலயம் தாயக பகுதியில் பல்வேறு உதவித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது
.
அதனடிப்படையில் லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்பாள் ஆலயத்தின் “தாயின் நிழல்” எனும் தாயக உதவித்திட்டதின் கீழ் வடக்கு , கிழக்குப் பிரதேசங்களில் வசிக்கும் வயோதிப, வறிய குடும்பங்களுக்கான உடுதுணிகள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் முதலாவது கட்டமாக வடக்கின் வவுனியா சுந்தரபுரம் மற்றும் தரணிக்குளம் ஆகிய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உடுதுணி வழங்கி வைக்கப்பட்டது.
லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்பாள் ஆலய நிதி அனுசரணையில் வடமாகாண சமூகசேவைத்திணைக்களத்தின் மாவட்ட அதிகாரி வாசன் மற்றும் வெளிச்சம் மற்றும் நீம் அமைப்பும் இணைந்து இவ்வறிய குடும்பங்களுக்கான ஒரு தொகை சாறிகளை வழங்கி வைத்தனர்.