இரத்தினபுரி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு!

1595510689 corona outbreak 2
1595510689 corona outbreak 2

இரத்தினபுரி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் நேற்றிரவு (23) பதிவாகியுள்ளது.

எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சமந்தா ராமசந்திர இதை குறிப்பிட்டுள்ளார்.

இதில் இரத்தினபுரி – பொம்பகெலே பகுதியைச் சேர்ந்த கிருஸ்னன் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

50 வயதான குறித்த நபர், முச்சக்கரவண்டி சாரதி என தெரிவிக்கப்படுகின்றது.

நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்களுடன் கொரோனா தொற்று ஏற்பட்டமையே, உயிரிழப்புக்கான காரணம் என அவர் குறிப்பிடுகின்றார்.