ஜனாஸா எரிப்புக்கு எதிராக வெள்ளை துணி கட்டி போராட்டம்

pro 2 1
pro 2 1

ஜனாஸா எரிப்புக்கு எதிராக, வெள்ளை துணி கட்டி கவனயீர்ப்பு போராட்டமொன்று கல்முனை பிரதான வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் ரஸாக்கின் ஏற்பாட்டில், கல்முனை பிரதான வீதியில் கொரோனா சுகாதார நடைமுறைக்கமைய  குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டமானது பல்வேறு சுலோகங்களை தாங்கி மேற்கொள்ளப்பட்டதுடன், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் நேர காலத்துடன் முடிவுறுத்தப்பட்டது.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எச்.எம்.ஏ.மனாப் உள்ளிட்ட அரசியல், சமூக, பொதுநல, செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

pro 3 1