போலி கடவுச்சீட்டு : யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கைது!

IMG 20201220 WA0011
IMG 20201220 WA0011

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி டுபாய் வழியாக கனடாவிற்கு செல்ல முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  குறித்த பெண்ணை குடிவரவு மற்றும் குடியகல்வு கண்காணிப்பு  பிரிவு கைது செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாய் நகருக்குச் செல்லும் E.K – 649 எனும் விமான ஊடக பயணிப்பதற்காக இன்று அதிகாலை 2.45 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த பெண்ணின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஏனைய ஆவணங்களை தொழில்நுட்ப சோதனைக்கு உட்படுத்திய  நிலையில், குறித்த கடவுச்சீட்டு வேறு ஒருவருக்குச் சொந்தமானது என தெரியவந்துள்ளது.

இந்த நிலையிலே, குறித்த பெண் குடிவரவு மற்றும் குடியகல்வு கண்காணிப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப்புலணாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.