யாழ் பல்கலைக்கழகத்தில் சுனாமியால் உயிரிழந்தோரின் நினைவு நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுனாமியால் உயிரிழந்தோர் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இன்றைய தினம் நினைவு கூரப்பட்டது.
குறித்த நிகழ்வில் உயிரிழந்தோர் நினைவாக நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டது.
தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் பங்கு பற்றுதலோடு சுனாமியால் உயிரிழந்தோரின் நினைவு நிகழ்வு இடம்பெற்றது.