தென்னிலங்கையில் வீதிகளின் பெயர்ப்பலகைகளில் விசமிகளினால் அகற்றப்பட்ட தமிழ்மொழியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவிற்கமைய மீண்டும் திருத்தியமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சில இடங்களில் வீதிகளின் தமிழ் பெயர்ப் பலகைகள் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வீதிகளின் பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழ்மொழியை அகற்றியவர்கள் தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பித்து அவர்களைக் கைது செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.