இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய இன்னிங்ஸ் மற்றும் 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சில் 106 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கட் இழப்பிற்கு 347 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இந்தியா சார்பில் அணித்தலைவர் விராட் கோலி 136 ஓட்டங்களையும், புஜாரா 56 ஓட்டங்களையும், ரகானே 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பங்களாதேஷ் அணி தனது 2வது இன்னிங்சில் 195 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. அதிக பட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 74 ஓட்டங்களையும், மஹ்மதுல்லா 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் உமேஷ் யாதவ் 5 விக்கட்டுக்களையும், இஷாந்த் சர்மா 4 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
ஆட்டநாயகனாகவும் தொடராட்ட நாயகனாகவும் இஷாந்த் சர்மா தெரிவு செய்யப்பட்டார்.