சுமார் 40 நாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை!

Dinesh Gunawardena 1
Dinesh Gunawardena 1

சுமார் 40 நாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தூதரகங்கள், கன்ஸியூலர் அலுவலகங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளவர்களை அழைத்துவரும் நோக்கத்துடன், சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாடு சென்ற இலங்கையர்களில் 52 ஆயிரம் பேர் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு, தென் ஐரோப்பிய நாடுகளுடன், ஜப்பான், கொரியா, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளிலும் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் வேலை செய்கிறார்கள். தம்மை முறையாக பதிவு செய்து கொள்ளாத ஐந்து இலட்சம் பேர் வரை வெளிநாடுகளில் வேலை செய்து வருவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் கூறியுள்ளார்.