20 ஆயிரம் கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது!

kaithu

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை உலர்ந்த மஞ்சளுடன் நால்வர் ஹங்கம பகுதியில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 20,000 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.