நாளை காலை 5 மணி முதல் கொழும்பின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு!

7feaa2070
7feaa2070

நாளை (28) காலை 5 மணியுடன் டேம் வீதி, வாழைத்தோட்டம், மருதானை ஆகிய காவல்துறை அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.

இதேவேளை கொம்பனித்தெருவில் வேகந்த மற்றும் ஹுனுப்பிட்டிய கிராம சேவகர் பிரிவு, வெள்ளவத்தை-மயூரா வீதி, பொரளை-ஹல்கஹவத்த மற்றும் காளிபுள்ளவத்த, வெள்ளம்பிட்டி லக்சந்த செவன வீடமைப்புத் திட்டம் ஆகிய பகுதிகளும் நாளை காலை 5 மணியிலிருந்து தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுமென அவர் தொிவித்துள்ளார்.

இதற்கு மேலாக வாழைத்தோட்டம்-அளுத்கடை மேற்கு மற்றும் அளுத்கடை கிழக்கு கிராம சேவகர் பிாிவுகள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படுமெனவும் அவர் மேலும் தொிவித்துள்ளார்.