ஹட்டனில் – அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வட்டவளை, மவுன்ஜின் தோட்டம் இன்று (28) தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்
இதற்கமைய, வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த மவுன்ஜின் தோட்டத்தில் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே குறித்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி,கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காகவே குறித்த பகுதி முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதியில் இருந்து வெளியேறுவதற்கும், நபர்கள் உள்ளே வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த பகுதியில் உள்ளவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 59 பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.