மஸ்கெலியா காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட காட்மோர் தனியார் தோட்டத்தில் 4 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று (28.12.2020) காலை முதல் பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவர்களின் பணி பகிஸ்கரிப்பானது கடந்த நூற்றாண்டு கால உரிமையாளரிடமிருந்து அவர்களுக்கு சேரவேண்டிய சேவைகால பணத்தை கோரியும், தங்கள் பணிபுரிந்த காலத்திற்கான ஊழியர் சேம இலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றை முறையாக செலுத்தி புதிய நிர்வாகத்திடம் கையளிக்கமாறும் இப்பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.
இப்பணி பகிஸ்கரிப்பின் போது தோட்ட முகாமையாளரும் , உதவி முகாமையாளரும் மட்டுமே அங்கு இருந்தனர். தோட்ட உரிமையாளர்கள் யாருமே அவ்விடத்திற்கு சமுகமளிக்கவில்லை.
தங்களது கோரிக்கை அனைத்தும் தோட்ட முகாமையாளரிடம் கையளித்த பின்னர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கோரிக்கைவிடுத்து பணி பரிஸ்கரிப்பை தொடர்ந்தனர்.