இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால், சவேந்திர சில்வாவின் பதவி நிலை உயர்த்தப்பட்டுள்ளது.
இவர், கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவராகவும் செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.