பேருவளை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா!

Beruwala 300x194 1
Beruwala 300x194 1

பேருவளை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளதாக பேருவளை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த அதிகாரி பேருவளைப் பகுதியில் கடந்த சில வாரங்களாக கடமையில் இருந்துள்ளதுடன் வைரஸ் தொற்று ஏற்பட்டதாக முன்னர் கண்டறியப்பட்ட உதவிகாவல்துறை பரிசோதகரின் அருகிலும் இருந்துள்ளார்.

குறித்த காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி பெந்தோட்ட பாலத்தில் இன்று காலை நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனை மேற்கொண் டுள்ளார். அவ்வேளையே அவருக்கு வைரஸ் தொற்றிருப்பது கண்டறியப்பட்டதாக பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி தம்மிக பெரேரா பேருவளை காவல்துறை நிலைய பதில் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.