குழத்தில் மூழ்கியவர்கள் சடலமாக மீட்பு

aarayampathy 1
aarayampathy 1

மட்டக்களப்பு, ஆரையம்பதி திருநீற்றுகேணி பகுதியில் புதிதாக தோண்டப்பட்ட குளத்தில் 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் ஒருவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொதுமக்கள் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஆரையம்பதி பிரதேசத்தை சேர்ந்த சு.தர்சன் (வயது 20), ந.திவாகரன் (வயது 19), எஸ்.யதுர்சன் (வயது 19) ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது .