மேலும் 108 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

திரும்பினர் 7
திரும்பினர் 7

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 108 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

அதன்படி, கட்டாரிலிருந்து 83 பேர் , அபுதாபியிலிருந்து 13 பேர், மாலைத்தீவிலிருந்து 12 பேர், ஆகியோர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.