மட்டக்களப்பு சந்திவெளியில் முந்திரி தோட்டம் ஒன்றில் இருந்து துப்பாக்கி ஒன்றுடன் ரவைகள் மீட்பு!

IMG 6066
IMG 6066

காவல்துறை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவு பொறுபதிகாரி, மற்றும் மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பண்டாரா தலைமையில் காவல்துறை குழுவினர் சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை (29) ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள சந்திவெளி வைத்தியசாலைக்கு அருகிலுள்ள முந்திரி தோட்டம் ஒன்றில் சோதனை நடவடிக்கையின் போது மரம் ஒன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி 81 ரக துப்பாக்கி ,2 மகசீன் மற்றும் 49 ரவைகள் என்பனவற்றை மீட்டுள்ளனர் .

இவ்வாறு துப்பாக்கி மீட்கப்பட்ட முந்திரித் தோட்ட உரிமையாளரான ஆசிரியர் மீது விசாரணை மேற்கொண்டுவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.