மக்கள் வாயையும் வயிற்றையும் பெல்டினால் இறுக்கி கட்டிக் கொள்ள வேண்டும் அடுத்த வருட கடன் மற்றும் வட்டியை கட்டக் கூட வருவாய் இல்லை என போக்குவரத்து, மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டை நினைத்து புதிய அரசுக்கு வாக்களித்த மக்கள் பொருளாதார பிரச்சனைகளை தாங்கிக் கொண்டு அவற்றுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.
புதிய அரசு வந்ததும் உடனடியாக நிலைமைகளை மாற்ற முடியாது. அடுத்த வருட கடன் மற்றும் வட்டியை கட்டக் கூட வருவாய் இல்லை என நேற்று முன்தினம் (Nov.24) அங்குணுபெலஸ்ஸ பிரதேசத்தில் வைத்து அமைச்சர் தமது ஆதரவாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.