தொடர்ந்தும் அப்துல்லா மஹ்ரூப் விளக்கமறியலில்!

o PRISON facebook 1
o PRISON facebook 1

முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை ஜனவரி மாதம் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் லங்கா சதொஷவிற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் திருகோணமலை – கிண்ணியா பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.