சிறைச்சாலை மோதலில் மரணித்த மேலும் 4 கைதிகளின் சடலங்களை தகனம் செய்யுமாறு உத்தரவு!

954540540courts judje new l
954540540courts judje new l

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் மரணித்த மேலும் 4 கைதிகளின் சடலங்களை தகனம் செய்யுமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு வத்தளை நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நான்கு பேரில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.