மது போதையில் வாகனம் செலுத்திய 1398 சாரதிகள் கைது

மது போதையில் வாகனம் செலுத்திய 1398 சாரதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்வதற்காக மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ​ரோஹண தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 20ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட விசேட போக்குவரத்து திட்டத்தின் கீழ் மது போதையில் வாகனம் செலுத்திய 1398 சாரதிகளை இதுவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.