கலைக்கப்பட்ட மாகாண சபைகளை மீண்டும் செயற்படுத்த சுதந்திரக் கட்சி யோசனை

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 8
625.500.560.350.160.300.053.800.900.160.90 2 8

கலைக்கப்பட்ட மாகாண சபைகளை மீண்டும் செயற்படுத்த அரசாங்கத்துக்கு யோசனை முன்வைக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின்போதே இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

  • புதிய மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் வரை கலைக்கப்பட்ட மாகாண சபைகளை மீண்டும் செயற்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையே தற்போது காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாகாண சபைகளில் சுகாதார அமைச்சர்கள் இருந்திருந்தால், கொரோனா தொற்று நடவடிக்கைகளை இன்னும் இலகுவாக முன்னெடுத்திருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.