பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்தது!

05265fd1 corona virus
05265fd1 corona virus

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று மேலும் 706 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 35,329 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.