தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரின் போராட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டாம்- இலங்கை முஸ்லிம் கவுன்சில்!

z p01 Muslim
z p01 Muslim

சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் இன்று ஒழுங்கு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்ற போராட்டத்தில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என இலங்கை முஸ்லிம் கவுன்சில் கோரிக்கை விடுத்திருக்கிறது.

அதன் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டுப்பாடான சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டு இருக்கும் நிலையில் அவற்றை மீறும் வகையில் இந்த போராட்டத்தில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை பிரச்சினைக்கு உள்ளாக்கும் விடயமாக காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது