ஹெரோயினுடன் ஒருவர் கைது

kaithu

மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய நபரொருவர் அம்பலாங்கொடை, பென்வெல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து 1.6 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் 8 பொதிகளில் வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 600 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.